உணர்வில் ஒன்றா மொழி
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க
மெக்காலே விரித்த வலை!!
கான்வென்டில் சிறார் பயில
மம்மி , டாடிக்கு பெரிதுவந்தேன்.
தருண் விஜய்க்கு புரிந்த குறள்
பாவம் தமிழனுக்கு புரியவில்லை
சான்றோன்மை வெறும் மொழியல்ல
அறிவு செறிந்த உணர்வென்று
அம்மா என்பது என் அணுவின் பதிவு
மம்மி யோ வெறும் செரிபுரத்தின் படிவு.
அப்பா என்பது என் ஆன்மாவின் உணர்வு
டாடி யோ வெறும் டெசிபல் லின் அதிர்வு.
மன்னிப்பு கேட்க மறுதலித்து
தவறுகள் செய்ய தயங்கி நின்றேன்
சாரி என்ற பதம் கிடைக்க
நன்னெறி அனைத்தும் வதம் செய்தேன்
கல்விக்கு ஒரு மொழியாம்
அந்த கடவுளுக்கும் ஒரு மொழி
இறையாண்மைக்கு இந்தி யென்றால்
தாய் மொழியாம் தமிழ் எதற்கு
வங்க தாகூரை தாழ்த்தவில்லை
எங்கள் பாரதியும் தாழ்ச்சியில்லை
வந்தாரை வாழ வைத்து
வந்த வழி மறந்து போனேன்
என் குறை தீர்த்துவைக்க
வேறு மொழியில் அர்ச்சித்தேன்
வக்ர துண்ட மஹா காய
வக்கிரமா வாழ்த்துரையா ?!
என் மொழியும் புரியவில்லை,
என் குறையும் தீர்க்கவில்லை
இடையீடு செய்ய தரகென்றால்
அவன் என்ன என் கடவுள்
என் கண்ணை பறித்து விட்டு
உன் கண்ணால் நான் காண
உணர்விலும் ஒன்றவில்லை
ஒரு மண்ணும் புரியவில்லை
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க
மெக்காலே விரித்த வலை!!
கான்வென்டில் சிறார் பயில
மம்மி , டாடிக்கு பெரிதுவந்தேன்.
தருண் விஜய்க்கு புரிந்த குறள்
பாவம் தமிழனுக்கு புரியவில்லை
சான்றோன்மை வெறும் மொழியல்ல
அறிவு செறிந்த உணர்வென்று
அம்மா என்பது என் அணுவின் பதிவு
மம்மி யோ வெறும் செரிபுரத்தின் படிவு.
அப்பா என்பது என் ஆன்மாவின் உணர்வு
டாடி யோ வெறும் டெசிபல் லின் அதிர்வு.
மன்னிப்பு கேட்க மறுதலித்து
தவறுகள் செய்ய தயங்கி நின்றேன்
சாரி என்ற பதம் கிடைக்க
நன்னெறி அனைத்தும் வதம் செய்தேன்
கல்விக்கு ஒரு மொழியாம்
அந்த கடவுளுக்கும் ஒரு மொழி
இறையாண்மைக்கு இந்தி யென்றால்
தாய் மொழியாம் தமிழ் எதற்கு
வங்க தாகூரை தாழ்த்தவில்லை
எங்கள் பாரதியும் தாழ்ச்சியில்லை
வந்தாரை வாழ வைத்து
வந்த வழி மறந்து போனேன்
என் குறை தீர்த்துவைக்க
வேறு மொழியில் அர்ச்சித்தேன்
வக்ர துண்ட மஹா காய
வக்கிரமா வாழ்த்துரையா ?!
என் மொழியும் புரியவில்லை,
என் குறையும் தீர்க்கவில்லை
இடையீடு செய்ய தரகென்றால்
அவன் என்ன என் கடவுள்
என் கண்ணை பறித்து விட்டு
உன் கண்ணால் நான் காண
உணர்விலும் ஒன்றவில்லை
ஒரு மண்ணும் புரியவில்லை